பக்கங்கள்

வியாழன், 26 ஜூன், 2014

உள்ளம் இறங்கி வா

நான்
தேடிய சீதை
நீ போகாதே
வேறு பாதை
நான் உன் நினைவாலே
உறக்கம் இழந்த பேதை
உன் மேல்
கொண்டேன் போதை
நான்
விதைக்கப் போகின்றேன் விதை

நீ
இடம் தருவாயோ
தனியாக வந்த
உனக்கு துணையாகத்தானே
வந்து நின்றேன்
நீ என்னை

ஏன் பார்க்க வல்லை
என் நாயகியே
நானல்லவா உன் பிள்ளை
நீ என்னை பார்க்காது
நேரம் ஆகிறது
என் விழியோரம்
நோகிறது
கன்னக்குழிக் கொண்ட
சின்னப் பூங்கொடியே

இன்னும் என்னை
ஏக்காதே  
உன் உள்ளம்
இரங்கினால்
என்
உள்ளம்
உறங்கிடுமே  

புதன், 18 ஜூன், 2014

தந்தி வராதா

பால்
நிலா உன்னை
நினைத்து  என் மனம்
பாலைவனமாகக்
கொதிக்குது
குளிர்கின்ற மேகங்களை
தொட்டுச் செல்கின்ற
நிலவே
என்னை உன்
நிழல் தொட்டாலும்
போதுமே

வானிலே நீந்தி
வரும் வெண் மீனே
இரு கை ஏந்தி வரும்
எனக்கு எப்போது
உன்னிடமிருந்து
தந்தி வரும்
என்னை வரச் சொல்லி
தந்தி
வந்து விட்டால்
பெளர்ணமி இரவில் 
பாதி மரம் ஏறிய
முத்தழகே
உன்னைச் சந்திக்க
முந்திக்  கொள்வேன்
மந்தி என
தாவி வந்து 

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

என் கண்ணீரை கறைக்காதே

அம்மாடியோ 
ஆத்துப்பக்கம் 
நீ போனியோ 
அச்சடிக்கப்பட்டுள்ளதே 
ஆத்து மனலில் 
உன் பாதங்கள் 
தேடுகிறேன் 
கிடைக்கவில்லை உன் பாதங்கள்

வாடுகிறேன் 
நீ போன 
இடம் தெரியாது 
என் மனம் 
இருண்டு இரவானது 
என்னைத் தேடி 
நீ வந்தால் 
இரவான இந்த 
மனம் விடியும் 

நீ 
வரும் வரை 
இந்த ஆற்று நீரோடு 
என் கண்ணீரும் ஓடும் 
 இந்த
ஆறு  வற்றிப் போனாலும் 

என்  கண்ணீரை ஊற்றி 
போற்றுகின்றேன் 
என் கண்மணியே 
நீ 
வீ ற்றிருக்கும் இடத்தைக் 
கூறு 

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

மறைந்து என்னை ஏக்காதே

சல சலப்பே இல்லாமல்
நீ சாலையோரம்
போன போது
 சலப்பின்றி
நான் பார்த்தேன்
உன் அழகை
பூ முடித்த
பெண் மயிலே
இன்று
உன் முகம் கானுது
என் அகம்
துடி துடித்து
போகுது
ஓசையின்றி
 ஓடி வந்த மானே

நீ
ஒளிந்திருக்கு திசை
எது தானோ
உன் குரல்
கேட்டால் மெல்ல
நான்
அசைவேனே
பூ
முகம் கண்டால்
அதை முகர
இசைவேனே
ஏதும்
இங்கே காணவில்லையே
ஏன்?  

வியாழன், 2 ஜனவரி, 2014

எனக்கும் போட்டியா

 சின்ன
குயில் நீ
என்ன செய்வாய்
அன்னநடை
பயின்று வரும்
உன்  சின்ன
இடையை  நான்
அள்ளிக் கொண்டால்
சின்னக் குயிலே நீ
என்ன செய்வாய்
எந்தன் முன்னே

பெண்களின் எத்தனை பிம்பம்
இருந்தும் உன்னைத் தான்
நோக்குது என்
பார்வை அம்பும்
எனக்கு மட்டும் தான்
நீ சொந்தம்
ஆனால் போட்டிக்கு வருதே
இளம் அழகு
நீ  வலம் வரும்
நிலம் கூட என்னுடன்
போட்டிக்கு வருதே
உன் சொந்தம்
யாருக்கு
அதைச்
சொல்லிடம்மா
இந்த பாருக்கு

ஏன் என்னை ஏக்கினாய்

என் எதிரே
வந்த உதிரா முல்லையே
உன்னை
நான் தொட்டுப் பார்க்க
நேரம் வல்லையே
உன் நேரே
வந்தேன் நீ
ஓரம் சென்றாய்
தாரம் என்று
சொல்லி என்
மாரில் அணைக்க் வந்தேன்
நீ
தூரம் சென்றதாலே
நான் துயரம்
தான் கொண்டேன்

நீ என்னருகெ
வந்த போது தொட்டிட
தான் நினைத்தேன்
திட்டிடுவாயோ என
எண்ணி தொடாது
இருந்து விட்டேன்
கொட்டிட வந்த
மேகம் கொட்டாது
சென்றது போல்

உதட்டோரம்
புன்னகை சிந்தி
என் உள்ளத்தை
தொட்டு  விட்டு
உடலைத் டொடாது
போன தேனோ