பக்கங்கள்

புதன், 18 ஜூன், 2014

தந்தி வராதா

பால்
நிலா உன்னை
நினைத்து  என் மனம்
பாலைவனமாகக்
கொதிக்குது
குளிர்கின்ற மேகங்களை
தொட்டுச் செல்கின்ற
நிலவே
என்னை உன்
நிழல் தொட்டாலும்
போதுமே

வானிலே நீந்தி
வரும் வெண் மீனே
இரு கை ஏந்தி வரும்
எனக்கு எப்போது
உன்னிடமிருந்து
தந்தி வரும்
என்னை வரச் சொல்லி
தந்தி
வந்து விட்டால்
பெளர்ணமி இரவில் 
பாதி மரம் ஏறிய
முத்தழகே
உன்னைச் சந்திக்க
முந்திக்  கொள்வேன்
மந்தி என
தாவி வந்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக